என் மலர்
நீங்கள் தேடியது "2 மாடுகள் பலி"
- இவருக்கும், குப்புசாமி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
- நேற்று ருக்குமணியின் 2 பசுமாடுகள் கொட்டகையில் இறந்து கிடந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள பண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் ருக்குமணி. இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். இவருக்கும், குப்புசாமி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
நேற்று ருக்குமணியின் 2 பசுமாடுகள் கொட்டகையில் இறந்து கிடந்தது.
இது குறித்து அவர் சிங்காரபேட்டை போலீசில் குப்புசாமி என்பவர் தீவனத்தில் யூரியாவை கலந்து கொடுத்ததால் எனது பசுமாடுகள் இறந்துள்ளது என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து குப்புசாமியை தேடி வருகின்றனர்.






