என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிங்காரபேட்டை அருகே விஷம் வைத்து 2 மாடுகள் பலி
- இவருக்கும், குப்புசாமி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
- நேற்று ருக்குமணியின் 2 பசுமாடுகள் கொட்டகையில் இறந்து கிடந்தது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள பண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் ருக்குமணி. இவர் பசுமாடுகள் வளர்த்து வந்தார். இவருக்கும், குப்புசாமி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
நேற்று ருக்குமணியின் 2 பசுமாடுகள் கொட்டகையில் இறந்து கிடந்தது.
இது குறித்து அவர் சிங்காரபேட்டை போலீசில் குப்புசாமி என்பவர் தீவனத்தில் யூரியாவை கலந்து கொடுத்ததால் எனது பசுமாடுகள் இறந்துள்ளது என்று கூறியிருந்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து குப்புசாமியை தேடி வருகின்றனர்.
Next Story






