உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2022-07-15 13:31 IST   |   Update On 2022-07-15 13:31:00 IST
  • சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி ஆனார்.
  • புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாது. இவரது மகன் அருண் (வயது 19), தொழிலாளி.இவர் ரிஷிவந்தியம் பெரிய ஏரியில் குளித்தபோது திடீரென அவரை காணவில்லை என உடன் வந்தவர்கள் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் தியாகதுருகம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஏரியில் இறங்கி மாயமான அருணை தேடினர். ஆனால் அவரை காணவில்லை. பின்னர் நேற்று மீண்டும் தேடும் பணி தொடங்கியது. இதில் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து கிராமமக்களும் சேர்ந்து தேடினர்.

அப்போது இறந்த நிலையில் அருணின் உடல் மீட்கப்பட்டது. பின் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News