உள்ளூர் செய்திகள்

ராயக்கோட்டை அருகே போதை தகராறில் டிரைவரை தாக்கிய நண்பர்கள் -3 பேர் மீது வழக்கு-ஒருவர் கைது

Published On 2022-11-25 09:34 GMT   |   Update On 2022-11-25 09:34 GMT
  • மது அருந்தியுள்ளனர்.அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
  • 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த ராயக்கோட்டை போலீசார் பூங்கனை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன் (வயது 34). லாரி டிரைவர்.

இவரது நண்பர்கள் குமார்(45), பூங்கன்(45), மற்றொரு குமார் (42). இவர்களும் லாரி டிரைவர்கள்.

இவர்கள் நேற்று மாலை ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகேயுள்ள அரசு மதுக்கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த குமார் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து முனிகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.படுகாயம் அடைந்த முனிகிருஷ்ணன் ராயக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து முனி கிருஷ்ணன் தந்த புகாரின்பேரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த ராயக்கோட்டை போலீசார் பூங்கனை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வரு கின்றனர்.

Tags:    

Similar News