உள்ளூர் செய்திகள்
ராமநத்தம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
திருமணம் செய்துவைக்காததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் ராமநத்தத்தை அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மணிகண்டன் (வயது 29). திருமணம் ஆகாதவர். மணிகண்டன் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை அவரது தாய் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரை சுற்றி வருகிற எப்படி உனக்கு திருமணம் செய்வது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் கோபித்துக் கொண்டு கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்தார்.
இதனை அறிந்த உறவினர்கள் மணிகண்டனை மீட்டு திருச்சி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மணிகண்டன் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.