உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே :முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-11-16 07:15 GMT   |   Update On 2023-11-16 07:15 GMT

கடலூர்:

பண்ருட்டியை அடுத்த சிறுகிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம் (வயது 80), முத்துலிங்கம் கடந்த சிலநாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த முத்துலிங்கம் கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்து அவரை மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகசேர்த்தனர்.

மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிக்காமல் முத்துலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News