உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே கடனை திருப்பி கேட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல்
- பண்ருட்டி அருகே கடனை திருப்பி கேட்ட வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
- ஏற்கனவே தரவேண்டிய பாக்கிபணத்தை சஞ்சீவிகேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுனன் கத்தியை எடுத்து காட்டி உள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கட்டமுத்துபாளையம் கிராமத்தை ச்சேர்ந்தவர்சஞ்சீவி (வயது 53). இவர் அதே பகுதியில்பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு அதே பகுதியை சேர்ந்த அர்ஜுணன் என்பவர் வந்தார். அவர் ஏற்கனவே தரவேண்டிய பாக்கிபணத்தை சஞ்சீவிகேட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்தஅர்ஜுனன் வியாபாரியை சஞ்சீவியை அசிங்கமாக திட்டி கத்தியை எடுத்து காட்டிகொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதுபற்றி புதுப்பேட்டை போலீசில் சஞ்சீவிகொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார்சப்.இன்ஸ்பெக்ட ர்செல்வம்ஆகியோர் வழக்குப்பதிவுசெய்து கொலைமிரட்டல் விடுத்த அர்ஜுனனை தேடிவருகின்றனர்.