உள்ளூர் செய்திகள்

ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஈஸ்வரி.

ஓமலூர் அருகே தாயை அடித்து உதைத்த மகன் பள்ளம் தோண்டுவதை தடுத்ததால் ஆத்திரம்

Published On 2022-10-17 12:53 IST   |   Update On 2022-10-17 12:53:00 IST
  • வீட்டின் அருகே குடிநீர் குழாய் அமைப்பதற்காக பொக்லைன் வாகனம் கொண்டு பள்ளம் தோண்டியுள்ளனர்.
  • அப்போது, தனது வீட்டருகே பள்ளம் தோண்ட வேண்டாம் என்று ஈஸ்வரி தடுத்துள்ளார்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுகா பெரியவடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 80). இவரது மனைவி ஈஸ்வரி (75). இந்த தம்பதிக்கு மாசிலாமணி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

மாசிலாமணிக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், வீட்டின் அருகே குடிநீர் குழாய் அமைப்பதற்காக பொக்லைன் வாகனம் கொண்டு பள்ளம் தோண்டியுள்ளனர்.

அப்போது, தனது வீட்டருகே பள்ளம் தோண்ட வேண்டாம் என்று ஈஸ்வரி தடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த அவரது மகன் மாசிலாமணி, பள்ளம் தோண்டுவதை தடுக்கிறாயா என்று கூறி, பெற்ற தாயை திட்டி, அடித்து தாக்கியுள் ளார். இதில், காயமடைந்த ஈஸ்வரி ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார், மாசிலாமணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஈஸ்வரி கூறும் போது பள்ளம் தொண்ட வேண்டாம் என்று கூறியதும் ஓடிவந்து தன்னை தாய் என்றும் பாராமல் அடித்து காயப்படுத்தினார். எனது வீட்டுக்காரர் பெரியசாமி பெயரில் உள்ள நிலத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்று கூறி, தங்களை தொடர்ந்து தொல்லை செய்து மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News