உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே மாயமானதாக தேடப்பட்ட மாணவன் தற்கொலை
- கல்லூரி மாணவர் மாயமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
- தோப்பு ஒன்றில் பூச்சிமருந்தை குடித்துவிட்டு கோவிந்தன் இறந்து கிடந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள தொகரப்பள்ளி ஆடாளம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் (வயது 18) என்ற கல்லூரி மாணவர் மாயமாகிவிட்டதாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் அவரை தேடிவந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தோப்பு ஒன்றில் பூச்சிமருந்தை குடித்துவிட்டு கோவிந்தன் தற்கொலை செய்துகொண்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது.
அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் அவர் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.