உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே கள்ளச்சாராயம் கடத்தியவர் கைது

Published On 2022-07-10 13:38 IST   |   Update On 2022-07-10 13:38:00 IST
  • மோட்டார் சைக்கிளில் டியூப்பில் கள்ளச்சாராயம் கடத்தினர்.
  • சங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் டியூப்பில் கள்ளச்சாராயம் கடத்தியதாக பெரம கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அழித்தனர். தலைமறைவான கனகராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News