உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே அண்ணியை தாக்கிய கொழுந்தன் கைது
- செந்திலாவை ஆபாச வார்த்தையில் திட்டி,சரமாரியாக தாக்கியுள்ளார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து மணிவண்ணணை கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மாதம்பதி பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது36). இவரது அண்ணன் மனைவி செந்திலா (40).
இந்த நிலையில் நேற்று மணிவண்ணன், செந்திலாவை ஆபாச வார்த்தையில் திட்டியும், சரமாரியாகவும் தாக்கியுள்ளார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.
இது குறித்து செந்திலா மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மணிவண்ணணை கைது செய்தனர்.
கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.