உள்ளூர் செய்திகள்

மகாராஜாகடை அருகே ஓட்டலில் உணவு வாங்கிவிட்டு பணம் தர மறுத்து தாக்குதல் -4 பேர் மீது போலீசார் வழக்கு

Published On 2022-11-27 15:06 IST   |   Update On 2022-11-27 15:06:00 IST
  • அன்பு (19) மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் வந்து சாப்பாடு வாங்கியுள்ளனர்.
  • 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டுநாயனபள்ளி பகுதியில் தாபா கடை நடத்தி வருபவர் விஜய் (வயது 25).இவரது கடைக்கு வந்த திருமலைநகர் பகுதியை சேர்ந்த அன்பு (19) மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் வந்து சாப்பாடு வாங்கியுள்ளனர்.

ஆனால் அதற்கு பணம் தரவில்லை. இது குறித்து கேட்டபோது விஜயிடம் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் தந்த புகாரின் பேரில் மகாராஜாக்கடை போலீசார் அன்பு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News