உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே பூச்சி மருந்து குடித்த வாலிபர் சாவு
- வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
- சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சதீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள வாலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சதீஸ் (வயது20). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதில் மனமுடைந்த சதீஸ் நேற்றுமுன்தினம் வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சதீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.