உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2022-11-23 15:21 IST   |   Update On 2022-11-23 15:21:00 IST
  • 3 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது.
  • சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.600 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள மாதம்பதி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் 3 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது தெரிய வந்தது.

போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற 3 பேரையும் மடக்கி அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.600 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.சூதாடிய முருகன், சுரேஷ்குமார்,சபீர் ஆகிய அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

இதேபோல வேப்பனபள்ளி போலீசார் சீலேபள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது இருசக்கரவாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்,அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடத்திவந்த தருமபுரி மாவட்டம் இண்டூரை சேர்ந்த நூரான் (வயது 42) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News