உள்ளூர் செய்திகள்

குமாரபாளையம் அருகே டெம்போ மோதி வாலிபர் பலி

Published On 2022-08-02 09:50 GMT   |   Update On 2022-08-02 09:50 GMT
  • தனது மோட்டார் சைக்கிளில் சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸல் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்தார்.
  • எதிரில் வேகமாக வந்த டெம்போ வாகனம் அவர் மீது மோதியது.

குமாரபாளையம்:

சேலம் மாவட்டம், வெள்ளரிவெள்ளி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது31), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸல் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்தார்.

ரங்கனூர் பிரிவில் இருந்து வலது பக்கமாக திரும்பும் போது, எதிரில் வேகமாக வந்த டெம்போ வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்ட அவர்,சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ டிரைவர் விழுப்புரத்தை சேர்ந்த இருதயராஜ்(45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News