உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய வாலிபருக்கு வலை

Published On 2022-10-23 12:58 IST   |   Update On 2022-10-23 12:58:00 IST
  • சிறுமி அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
  • சிறுமியையும், கடத்தியதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பத்தமாரப்பள்ளி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பாகலூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்ற அந்த சிறுமி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அந்த சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் விசாரித்தும் சிறுமி குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த சிவா (வயது 22) என்ற வாலிபர் சிறுமியை கடத்தி சென்றிருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான சிறுமியையும், கடத்தியதாக கூறப்படும் வாலிபரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News