உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி டேம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
- நெக்குந்தி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த சென்னப்பன், அவதானப்பட்டியை சேர்ந்த அரவிந்த், ரகு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, டிச.9-
கிருஷ்ணகிரி டேம் அருகே நெக்குந்தி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த சென்னப்பன், அவதானப்பட்டியை சேர்ந்த அரவிந்த், ரகு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து 400 பணம் மற்றும் 4 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.