உள்ளூர் செய்திகள்

கெலமங்கலம் அருகே விஷம் குடித்த பெண் சாவு

Published On 2022-11-03 15:15 IST   |   Update On 2022-11-03 15:15:00 IST
  • கீதா கடந்த 18-ந்தேதி அன்று வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
  • சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்துள்ள யு.குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கீதா (வயது35).

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கீதா கடந்த 18-ந்தேதி அன்று வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி விழுந்து கிடந்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News