உள்ளூர் செய்திகள்

கெலமங்கலம் அருகே மாணவி கடத்தல்

Published On 2022-12-09 15:56 IST   |   Update On 2022-12-09 15:56:00 IST
  • வீட்டை வெளியே சென்ற பின் மாலையில் வீடு திரும்பவில்லை.
  • எனது மகளை அதே பகுதியை சேர்ந்த பீரேஷ் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்துள்ள கொட்டபெல்லூர் பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி. இவர் நேற்று வீட்டை வெளியே சென்ற பின் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்து கிடைக்கவில்லை.

இது குறித்து மாணவியின் பெற்றோர் எனது மகளை அதே பகுதியை சேர்ந்த பீரேஷ் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News