உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டனம் அருகே கிரானைட் நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் பொருட்கள் திருட்டு -முன்னாள் ஊழியர்கள் 3 பேர் கைது

Published On 2022-11-20 15:21 IST   |   Update On 2022-11-20 15:21:00 IST
  • ரூ.1.5 லட்சம் மதிப்பிலான மின்மோட்டார்கள், இரும்பு பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.
  • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நெடுங்கல் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 35). இவர் கிரானைட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று நிறுவனத்தின் உள்ளே புகுந்த மர்ம கும்பல் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான மின்மோட்டார்கள், இரும்பு பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.இதுகுறித்து காவேரி பட்டணம் போலீசில் கந்தன் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது அதே நிறுவனத்தில் வேலைபார்த்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிறுத்தப்பட்ட ஹரீஷ் (வயது 22), ஆனந்தன் (21), ஆபாஷ் (20) ஆகிய 3 பேர்தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News