உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டினம் அருகே மாணவியை கடத்திய வாலிபர்

Published On 2022-10-11 14:50 IST   |   Update On 2022-10-11 14:50:00 IST
  • கடந்த 9-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார்.
  • அதே பகுதியை சேர்ந்த திருமலை (வயது 20) என்ற வாலிபர்தான் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக மாணவியின் தாய் புகார் செய்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகேயுள்ள எர்ரஅள்ளி பகுதியை சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் தருமபுரியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து

இவர் கடந்த 9-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார். அவரை பற்றி பல்வேறு இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமலை (வயது 20) என்ற வாலிபர்தான் தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக மாணவியின் தாய் புகார் செய்துள்ளார். இந்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News