உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2022-07-29 15:14 IST   |   Update On 2022-07-29 15:14:00 IST
  • வினிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடார்.
  • இது குறித்து பாகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பாகனூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி வினிதா (வயது21). இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை.

இதில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த வினிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடார்.

இது குறித்து பாகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News