உள்ளூர் செய்திகள்
- தனியார் குடியிருப்பு சங்கம் சார்பில் நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது.
- அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் ஒசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பூனப்பள்ளியில், ஓசூர் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் குடியிருப்பு சங்கம் சார்பில் நேற்று ரத்ததான முகாம் நடைபெற்றது.
இதில்,போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் ஒசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
மேலும் இதில், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகன், செங்குட்டுவன், துணை மேயர் ஆனந்தய்யா, ஒசூர் ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.