உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே முன்விரோத தகராறில் பெண் மானபங்கம்

Published On 2022-09-19 07:48 GMT   |   Update On 2022-09-19 07:48 GMT
  • இளையராஜாவின் தாய் மீனாவை அடித்து மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
  • காயம் அடைந்த புவனேஸ்வரி, மீனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்

கடலூர்:

கடலூர் முதுநகரை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பூபதி என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது.

சம்பவத்தன்று இளையராஜாவிடம் பூபதி மற்றும் சேதுபதி ஆகியோர் குடிபோதையில் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இளையராஜாவின் தாய் மீனாவை அடித்து மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த புவனேஸ்வரி, மீனா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் பூபதி மற்றும் சேதுபதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News