உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்

Published On 2022-07-10 08:21 GMT   |   Update On 2022-07-10 08:21 GMT
  • கடலூர் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயமானார்.
  • வழக்கம் போல் தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிள் கல்லூரி மாணவி கல்லூரிக்கு சென்று வருகிறேன் என கூறி சென்றார்.

கடலூர்:

கடலூர் அருகே சி.என.பாளையம் சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகள் கடலூர் தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிள் கல்லூரி மாணவி கல்லூரிக்கு சென்று வருகிறேன் என கூறி சென்றார். பின்னர் நடுவீரப்பட்டு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சில் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கல்லூரி மாணவியை எங்கு தெரியும் கிடைக்கவில்லை. இது குறித்து நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News