உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே திருடன் என நினைத்து வாலிபரை அடித்து உதைத்த கிராம மக்கள்

Published On 2022-09-09 08:35 GMT   |   Update On 2022-09-09 08:35 GMT
  • எம்.புதூர் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு வருகிறது.
  • வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

கடலூர்: 

கடலூர் அருகே எம்.புதூர் பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிக்காக அந்த பகுதியில் இரும்பு உள்ளிட்ட தளவாட பொருட்கள் போடப்பட்டு உள்ளது. இதனை அந்த பகுதி மக்கள் கண்காணித்து வருகிறார். நேற்று இரவு 3 வாலிபர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். இதனை பார்த்த கிராம மக்கள் அந்த வாலிபர்களை பார்த்து திருடர்கள் வந்து உள்ளனர் என கருதி துரத்தினர். அப்போது அவர்களில் 2 பேர் தலைதெறிக்க ஓடிவிட்டனர். இதில் ஒருவர் சிக்கினார்.

அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். ஆனால் அந்த வாலிபர் வேதனையால் கதறினார். உடனே கிராம மக்கள் அந்த வாலிபரை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் எம்.புதூர் பகுதியை சேர்ந்த பிரபு என தெரியவந்தது. இவருடன் வந்த வாலிபர்கள் அந்த பகுதியில் அமர்ந்து மது குடிக்க சென்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  

Tags:    

Similar News