உள்ளூர் செய்திகள்

டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதி நிற்கும் காட்சி.

கடலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் மீது கார் மோதியது டிரைவர் காயம்

Published On 2023-07-17 09:34 GMT   |   Update On 2023-07-17 09:34 GMT
  • கடலூர் அடுத்த வரக்கால்பட்டு சேர்ந்தவர் சுந்தரராமன்
  • கடலூர் - பாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

கடலூர்:கடலூர் அடுத்த வரக்கால்பட்டு சேர்ந்தவர் சுந்தரராமன் (வயது 34). டிரைவர். சம்பவத்தன்று காராமணி குப்பத்திலிருந்து சுந்தரவாண்டி வழியாக கடலூர் - பாலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரத்தில் இருந்த பெரிய அளவிலான மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பலத்த சத்தத்துடன் எதிர்பாராமல் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் மின்கம்பம் முறிந்து டிரான்ஸ்பார்மர் கார் மீது விழுந்தது.இந்த விபத்து காரணமாக உடனடியாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் காரில் இருந்த டிரைவர் சுந்தர் ராமனுக்கு காயம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சுந்தர்ராமனை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்குக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மின் இணைப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொண்டனர். இது மட்டுமின்றி சேதமடைந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பத்தை அகற்றி மின்சார துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News