உள்ளூர் செய்திகள்

கால்வாயில் செத்து மிதந்த மீன்களை பொதுமக்கள் பார்த்த போது எடுத்தபடம்.

சூளகிரி அருகே தனியார் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் செத்து மிதந்த மீன்கள்

Published On 2022-08-05 09:41 GMT   |   Update On 2022-08-05 09:41 GMT
  • கால்வாயில் மீன்கள் மற்றும் பாம்புகள் செத்து மிதந்தது.
  • தற்போது கழிவுநீர் பிரச்சனையால் ஏரியில் உள்ள மீன்கள் என்னவாகும் என குத்தகைக்கு எடுத்தவர் அச்சம் அடைந்துள்ளார்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா தியாகரசனப் பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிகரளப்பள்ளி கிராமத்தில் 100-க்கும் குடியிருப்புகள் உள்ளது.

இந்த கிராமத்தின் அருகே உள்ள இந்திரா நகரில் அட்டை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் தண்ணீர் மாசுப்படுகிறது.

தற்போது மழை அதிகரிப்பால் ஏரிக்கு செல்லும் பகுதியில் உள்ள கால்வாயில் கழிவுநீர் கலக்கிறது. இதனால் கால்வாயில் மீன்கள் மற்றும் பாம்புகள் செத்து மிதந்தது. இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கவுண்டன் ஏரியை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பவர் 80 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்து உள்ளார். தற்போது கழிவுநீர் பிரச்சனையால் ஏரியில் உள்ள மீன்கள் என்னவாகும் என அச்சம் அடைந்துள்ளார்.

Tags:    

Similar News