உள்ளூர் செய்திகள்

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாப சாவு

Published On 2022-08-25 13:53 IST   |   Update On 2022-08-25 13:53:00 IST
அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோதியது.

கடலூர்:

சிதம்பரம் அடுத்த மணிகொல்லை பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 80). இவர் கடந்த 5-ந் தேதியன்று இரவு புதுச்சத்திரத்திலிருந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று போது அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் இவர் மீது வேகமாக மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி வடிவேல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடிவேல் மகன் தனசேகர் அளித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News