உள்ளூர் செய்திகள்
பர்கூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
- கடந்த 1-ந் தேதி கிணறு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து சின்னன்னன் நீரில் மூழ்கி பலியானார்.
பர்கூர்,
பர்கூர் தாலுகா சிந்தகம்பள்ளி அருகே உள்ள கொட்லட்டியை சேர்ந்தவர் சின்னண்ணன் (வயது 75).
இவர் கடந்த 1-ந் தேதி அந்த பகுதியில் உள்ள கிணறு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.
இதில் சின்னன்னன் நீரில் மூழ்கி பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.