உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில்ரூ.7.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2023-04-22 09:53 GMT   |   Update On 2023-04-22 09:53 GMT
  • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார், சின்ன முதலைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
  • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 900 கிலோ புகையிலை பொருட்கள் சுமார் 30 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.

நாமக்கல்:

நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார், சின்ன முதலைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வாகனத்தை சுற்றிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று கொண்டு இருந்தனர்.

அவர்கள், அந்த வாக னத்தை சோதனை செய்ய சென்றபோது, டிரைவர் வாகனத்தை எடுத்து செல்ல முயன்றார். அப்போது அங்கு சென்ற போலீசார், வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

இதில் அந்த வாகனத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 900 கிலோ புகையிலை பொருட்கள் சுமார் 30 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலை பொருட்களை சரக்கு வாக னத்துடன் போலீசார் பறி முதல் செய்தனர். இதை யடுத்து சரக்கு வாகன டிரைவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள செம்மாண்டப் பட்டியை சேர்ந்த தங்கதுரை (வயது 40) என்பவரை போலீ சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

Tags:    

Similar News