உள்ளூர் செய்திகள்

முதியவர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-05-26 07:49 GMT   |   Update On 2023-05-26 07:49 GMT
  • பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் உடல் வலி காரணமாக பல்வேறு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
  • குருணை மருந்தை நேற்று குடித்தார். அப்போது வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டுள்ளார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 73). இவர் உடல் வலி காரணமாக பல்வேறு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் உடல் வலி சரியாகாததால் அவதியில் இருந்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். உடல் வலி குணமாகாததால் விரக்தியில் இருந்த ராஜகோபால், வீட்டில் இருந்த குருணை மருந்தை நேற்று குடித்தார். அப்போது வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டுள்ளார்.

சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ராஜகோபால் உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News