உள்ளூர் செய்திகள்

உலக புகையிலை தின விழிப்புணர்வு பேரணி

Published On 2023-07-25 15:14 IST   |   Update On 2023-07-25 15:14:00 IST
  • தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை பள்ளி கல்வித்துறை சார்பாக உலக புகையிலை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரோஜா தலைமையில் புகையிலை தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை பள்ளி கல்வித்துறை சார்பாக உலக புகையிலை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரோஜா தலைமையில் புகையிலை தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அலங்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்து அலுவலர் மருத்துவர் கார்த்திகா கலந்து கொண்டு புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகளும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறி புகையிலை எதிர்ப்பு தின பேரணியை துவக்கி வைத்தார் இப்பேரணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலமுரளி பாபு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார் சிவானந்தன் ஆசிரியர்கள் சண்முகசுந்தரம் பிரியா கார்த்திக் மற்றும் மாணவ மாணவிகள் இப் பேரணியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News