நாமக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் சான்று பெற சிறப்பு முகாம்
- முதல் பட்டதாரி சான்று கேட்டு 209 பேர், வருமானச் சான்று கேட்டு 85 பேர், இருப்பிடச் சான்று கேட்டு 220 பேர், ஜாதி சான்று கேட்டு 4 பேர், என மொத்தம் 518 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
- இந்த மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைன் மூலம் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து, சான்று பெற சிறப்பு முகாம் நடக்கி றது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்க ளில் நடைபெற்ற பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில, முதல் பட்டதாரி சான்று கேட்டு 209 பேர், வருமானச் சான்று கேட்டு 85 பேர், இருப்பிடச் சான்று கேட்டு 220 பேர், ஜாதி சான்று கேட்டு 4 பேர், என மொத்தம் 518 மாணவ மாண விகள் விண்ணப்பித்துள்ள னர். இந்த மாணவர்களின் சான்றிதழ்களை, ஆன்லைன் மூலம் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்து, சான்று பெற சிறப்பு முகாம் நடக்கி றது. மேற்கண்ட சான்று கேட்டு விண்ணப்பித்த மாணவ, மாணவியர், மையத்தின் தலைமை ஆசிரி யரிடம் தேவையான ஆவ ணங்களை, நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9:30 மணிக்கு ஒப்படைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சான்றுகள் பதிவேற்றம் செய்யும் பள்ளிகளின் விபரம்:- நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, முத்துகாப்பட்டி, கோனூர் மற்றும் ஆர்.பட்டணம் அரசு மேல்நி லைப்பள்ளி, நாமகி ரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அலவாய்ப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி. மணலி ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பாண்டமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தேவனாங்குறிச்சி மற்றும் தண்ணீர்பந்தல்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.
இந்த பள்ளிகளில் செயல்படும் சிறப்பு மையங்கள் மூலம் ஆன்லை னில் வெப்சைட்டில் விண்ணப்பித்தவுடன், மாணவ மாணவிகளுக்கு மேற்கண்ட சான்றுகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். சான்று கேட்டு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.