உள்ளூர் செய்திகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டுக்கோழி விலை உயர்வு
- பரமத்தி வேலூர் வார சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நாட்டுக் கோழிகளை விற்க விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
- வார சந்தையில் கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்து ரூ. 500 -க்கு விற்பனையானது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வார சந்தைக்கு சுற்று வட்டார பகுதிகளான மோகனூர், திருச்செங்கோடு, ஜேடர்பாளையம், சோழசிராமணி, பரமத்தி, ஜேடர்பாளையம், கபிலர்மலை, பாண்டமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்து நாட்டுக் கோழிகளை விற்க விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.
ஒரு கிலோ ரூ.500
வார சந்தையில் கடந்த வாரம் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூபாய் 400- க்கு விற்றது. நேற்று ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்து ரூ. 500 -க்கு விற்பனையானது.
இந்த வாரம் வார சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுக்கோழி வரத்து அதிகரித்து இருந்தது. ஆனால் அசைவ பிரியர்கள் வரும் தீபாவளி அன்று சமைப்பதற்கு முன்கூட்டியே வாங்கிச் சென்றதால் நாட்டுக்கோழி அனைத்தும் விற்பனையானது.
நாட்டுக்கோழி விலை உயர்வால் நாட்டுக்கோழி வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.