உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2023-06-17 14:50 IST   |   Update On 2023-06-17 14:50:00 IST
  • தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
  • அதன் அடிப்படையில் போலீசார், அந்த பகுதியில் சோதனை செய்ததில், அங்கு ஒருவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் - கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் எதிரே உள்ள சந்து பகுதியில், ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் போலீசார், அந்த பகுதியில் சோதனை செய்ததில், அங்கு ஒருவர் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர், அனிச்சம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (வயது 48) என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 100 வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்தி கிளைச்சறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News