உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் ஓட்டல்கள் மற்றும் சில்லி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்திய போது எடுத்த படம்.

ஓட்டல்கள்-சில்லி சிக்கன் கடைகளில்உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

Published On 2023-09-28 07:52 GMT   |   Update On 2023-09-28 07:52 GMT
  • ஓட்டல்கள், சில்லி சிக்கன் தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட் கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
  • சிக்கன் சில்லி கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை மற்றும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்கள், சில்லி சிக்கன் தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

ஆய்வு

அதன்பேரில் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் சுல்தான் பேட்டைபகுதிகளில் உள்ள சிக்கன் சில்லி கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது தயாரிப்பு தேதி இல்லாமல் வைத்தி ருந்த சில்லி பவுடர்கள் மூலம் உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் பழைய சப்பாத்தி மாவு மற்றும் கெட்டுப்போன இறைச்சி களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர்.

அபராதம்

இது தொடர்பாக ஓட்டல் கடைக்கு நோட்டீஸ் வழங்கி சுகாதாரமற்ற 6 கிலோ சில்லி பவுடர்களை பறி முதல் செய்தனர்.

தொடர்ந்து ஆய்வு செய்து தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்த அனைத்து கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இதுபோன்ற தரமற்ற உணவு பொருட் களை தயாரித்தாலோ, காலாவதியான சில்லி பவுடர் பயன்படுத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News