உள்ளூர் செய்திகள்
- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
- நேற்று காலை முதல் மாலை வரை வெயில் பொது மக்களை சுட்டெரித்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் பொது மக்களை சுட்டெரித்தது. மாலை 5 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்ததால், சாலைகளில் மழைநீர்பெருக்கெடுத்து ஓடியது. பஸ் பயணிகளும், பொதுமக்களும் குடைபிடித்த வாறு சென்ற னர்.இந்த மழை யின் காரணமாக இரவில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.