உள்ளூர் செய்திகள்

விற்பனைக்காக தேங்காய் சிரட்டைகளை கொட்டி வைத்திருந்த போது எடுத்த படம்.

தேங்காய் சிரட்டை விலை வீழ்ச்சி

Published On 2023-06-09 09:26 GMT   |   Update On 2023-06-09 09:26 GMT
  • தேங்காய் சிரட்டை கை களை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.
  • கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விற்ப னையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.7 -க்கு விற்ப னையாகிறது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், கண்டிப்பாளை யம், கொத்தமங்கலம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.

தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்கா யைப் பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்ற னர்.

அதே போல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டை கை களை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். வாங்கிய தேங்காய் சிரட்டைகளை தேங்காய்சி ரட்டை மூலம் கரி தயார் செய்பவர்களுக்கும், தேங்காய் சிரட்டையை அரைத்து பவுடர் தயாரிக்கும் மில்க ளுக்கு அனுப்பி வைக்கின்றனர். சிலர் தேங்காய் சிரட்டைகள் மூலம் உண்டி யல், பல்வேறு வகையான பொம்மைகள் மற்றும் பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விற்ப னையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.7 -க்கு விற்ப னையாகிறது. தேங்காய் சிரட்டை விலை வீழ்ச்சி யால் விவசா யிகள் கவலை அடைந்து ள்ளனர்.

Tags:    

Similar News