உள்ளூர் செய்திகள்

பள்ளிபாளையத்தில் தொடர் மழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Published On 2023-11-09 09:09 GMT   |   Update On 2023-11-09 09:09 GMT
  • சுற்றுவட்டார பகுதியில் ஏரி, குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் உள்ளன.
  • கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் நீர்நிலைகள் முற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்பட்டது.

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் ஏரி, குளம் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் நீர்நிலைகள் முற்றிலும் தண்ணீர் இன்றி வறண்டு போய் காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைக்கு மழைநீர் வர தொடங்கியுள்ளது. வறண்ட நிலையில் காணப்பட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News