உள்ளூர் செய்திகள்

கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

திருச்செங்கோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-08 15:14 IST   |   Update On 2023-07-08 15:14:00 IST
  • பா.ஜக அரசை கண்டித்து திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற்றது.
  • நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.

திருச்செங்கோடு:

ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய காரணமாக இருந்த பா.ஜக அரசை கண்டித்து திருச்செங்கோடு பழைய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற்றது.

நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், கிருஷ்ணன், அல்லி முத்து, மாவட்ட துணை தலைவர்கள் காசி விசுவநாதன், தங்கராஜ், மல்லை கிருஷ்ணன், வட்டார தலைவர்கள் சுரேஷ் கார்த்தி, ரவிச்சந்திரன், பழனிச்சாமி, நகரத் தலைவர்கள் பாலதண்டாயுதம், ராஜேந்திரன், ராஜா, மாவட்ட பொது செயலாளர் சிவாஜி, ஆறுமுகம் சிவாஜி, சேகர், நடராஜ், பிரபு, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News