உள்ளூர் செய்திகள்

தகுதி சான்று புதுப்பிக்காத3 வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Published On 2023-08-12 12:42 IST   |   Update On 2023-08-12 12:42:00 IST
  • இன்று காலை திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
  • தகுதி சான்று புதுப்பிக்காத 3 வாகனங்களை சிறைப்பிடித்து. தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

நாமக்கல்:

நாமக்கல்லில் தகுதி சான்று புதுப்பிக்காத 3 வாகனங்களை சிறைப்பிடித்து. தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

நாமக்கல் மோகனூர் சாலையில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் ஆய்வாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் இன்று காலை திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப் பட்டன. அப்போது தகுதிசான்று புதுப்பிக்காமல் சென்ற 2 சரக்கு வாகனங்கள் சிறைபிடித்தார். அந்த வாகனங்களுக்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன. இதே போல நேற்று இரவு தகுதிசான்று புதுப்பிக்கா மல் சென்ற ஒரு வாகன உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News