உள்ளூர் செய்திகள்

அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில்வேளாண் பொருட்கள் ரூ.14.26 லட்சத்துக்கு விற்பனை

Published On 2023-10-25 07:32 GMT   |   Update On 2023-10-25 07:32 GMT
  • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
  • ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஏலம் நடைபெற்றது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஏலம் நடைபெற்றது. பண்டிகை காரணமாக விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலத்திற்க்கு கொண்டுவரப்பட்டது.

இந்த வாரம் நடந்த ஏலத்தில் 8.52 குவிண்டால் எடை கொண்ட 2 ஆயிரத்து 635 தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.26.81-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.25.35-க்கும், சராசரி விலையாக ரூ.26.35-க்கும் விற்பனையானது.

அதேபோல் 175.05 குவிண்டால் எடை கொண்ட322-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.84.79-க்கும், சராசரி விலையாக ரூ.84.89-க்கும் விற்பனையானது.

2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.84.16-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.67.99-க்கும், சராசரி விலையாக ரூ.82.89-க்கும் என விற்பனையானது. ஒரே நாளில் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 14 லட்சத்து 26 ஆயிரத்து 752-க்கு விற்பனையானது.

Tags:    

Similar News