உள்ளூர் செய்திகள்

வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதம்போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி

Published On 2023-07-25 15:06 IST   |   Update On 2023-07-25 15:06:00 IST
  • லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதுவது போல் ஒருவர் ஓட்டி சென்றார்.
  • ஆத்திரம் அடைந்த இருசக்கரத்தில் சென்றவர் லாரியை நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நாமக்கல்:

நாமக்கல்-திருச்சி சாலையில் லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதுவது போல் ஒருவர் ஓட்டி சென்றார். ஆத்திரம் அடைந்த இருசக்கரத்தில் சென்றவர் லாரியை நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சுமார் ½ மணி நேரம் 2 பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வாகன ஓட்டிகளே சண்டையிட்ட இருவரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். நாமக்கல் பேருந்து நிலையம் மற்றும் பூங்கா சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் காலை வேளையில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை சரிசெய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Tags:    

Similar News