உள்ளூர் செய்திகள்

நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 சென்டிமீட்டர் கொட்டித்தீர்த்த மழை

Published On 2024-05-24 03:54 GMT   |   Update On 2024-05-24 03:54 GMT
  • கோடை காலத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும்.
  • ஊத்து பகுதியில் 78 மில்லி மீட்டரும் என கனமழை பெய்துள்ளது.

நெல்லை மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 464.2 மில்லி மீட்டர் அதாவது சுமார் 47 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த கோடை காலத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும். அதே நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நெல்லையின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை வனப்பகுதியிலும் நேற்று மாலையில் தொடங்கி இன்று காலை வரையிலும் பலத்த மழை பெய்துள்ளது.

நாலுமுக்கில் 10.3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 43 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 66 மில்லி மீட்டரும், ஊத்து பகுதியில் 78 மில்லி மீட்டரும் என கனமழை பெய்துள்ளது.

Tags:    

Similar News