உள்ளூர் செய்திகள்

ஆறு சரவண தேவர்

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் - முக்குலத்து புலிகள் கட்சி வலியுறுத்தல்

Published On 2022-06-09 09:40 GMT   |   Update On 2022-06-09 09:40 GMT
  • தமிழகத்தில்ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையா ட்டுக்கு அடிமையாகி ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர்.
  • 15 உயிர்கள் பலியான சூழலிலும் இதை தடை செய்ய தயங்குவது ஏன்? என்பது புரியவில்லை. பலர் அறிவுறை கூறியும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் ஆன்லைன் ரம்மியை பலர் விளையாடி வருவது வேதனை அளிக்கிறது.

நாகப்பட்டினம்:

முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில்ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையா ட்டுக்கு அடிமையாகி ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர்.

15 உயிர்கள் பலியான சூழலிலும் இதை தடை செய்ய தயங்குவது ஏன்? என்பது புரியவில்லை. பலர் அறிவுறை கூறியும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பில் ஆன்லைன் ரம்மியை பலர் விளையாடி வருவது வேதனை அளிக்கிறது. எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News