உள்ளூர் செய்திகள்

பொது சுகாதார மையம் கட்ட பூமிபூஜை நடந்தது.

பொது சுகாதார மையம் கட்ட பூமிபூஜை

Published On 2022-06-06 07:56 GMT   |   Update On 2022-06-06 07:56 GMT
  • அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
  • ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய பொது சுகாதார மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

இதேப்தபோல் செட்டிபுலம், பிராந்தியங்கரை, கத்திரிபுலம், கருப்பம்புலம் ஊராட்சிகளில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். மிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் துளசாபுரம் ஊராட்சியில் ரூ.28.94 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டபட்டது.

கோடியக்கரை ஊராட்சியில் ரூ. 40.80 லட்சம் மதிப்பீட்டிலும், வாய்மேடு ஊராட்சியில் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலும் புதியதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடங்கள் திறக்கபட்டது.

நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News