உள்ளூர் செய்திகள்

மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் 2 பேர் கைது

Published On 2023-02-23 12:26 IST   |   Update On 2023-02-23 12:26:00 IST
  • தி.மு.க.-நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.
  • வீரப்பன் சத்திரம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியில் நேற்று இரவு தி.மு.க.-நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக வீரப்பன் சத்திரம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையைச்சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் விஜய், கணேஷ் பாபு ஆகிய 2 பேரை வீரப்பன் சத்திரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினர் 2 பேர் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும் போலீஸ் நிலையம் முன்பு ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News