உள்ளூர் செய்திகள்

ஜெகனின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தயாசங்கர் ஆகியோர் ஆறுதல் கூறிய காட்சி.

பா.ஜனதா பிரமுகர் கொலை: போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அத்துமீறிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேட்டி

Published On 2023-08-31 14:49 IST   |   Update On 2023-08-31 14:49:00 IST
  • போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டவர்களை பெண்கள் என்றும் பாராமல் போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுள்ளனர்.
  • உயிரை பறி கொடுத்தவர்கள் நீதி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் காவல்துறையினரின் இந்த செயல் மிகவும் தவறானது என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

நெல்லை:

பாளையில் பா.ஜனதா நிர்வாகி ஜெகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பிரமுகர் பிரபு உள்ளிட்டவர்களை கைது செய்ய கோரி அவரது குடும்பத்தினர், உறவினர்கள் இன்று முருகன் குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதா வது:-

இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் நியாயம் கேட்டு ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்டவர்களை பெண்கள் என்றும் பாராமல் போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுள்ளனர்.

முடியை பிடித்து இழுத்து அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாநகர காவல் துறை இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. உயிரை பறி கொடுத்தவர்கள் நீதி வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் காவல்துறையினரின் இந்த செயல் மிகவும் தவறானது. நியாயத்திற்காக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மீது காவல்துறை அத்துமீறி நடந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மீது தீண்டாமை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும்.

உயிரிழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் உடனடியாக சம்பந்தப்பட்ட வர்களை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி அனைவருக்கும் தண்டனை பெற்று தர வேண்டும். குற்றவாளிகள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான் போராட்டம் நடத்தியவர்கள் பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையினர் நடந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News