உள்ளூர் செய்திகள்
திருமுல்லைவாயல் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
- திருமுல்லைவாயில் முகமது அகில் என்பவரது மோட்டார் சைக்கிள் கடந்த 5-ந்தேதி திருடு போனது.
- 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
திருநின்றவூர்:
திருமுல்லைவாயில், முகமது அகில் என்பவரது மோட்டார் சைக்கிள் கடந்த 5-ந்தேதி திருடு போனது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை செய்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது பூந்தமல்லியை அடுத்த காடுவெட்டி பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு (19) மற்றும் வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்த கோபி (22) என்பது தெரிந்தது.
அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.